Close
ஜூன் 17, 2025 6:48 மணி

அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகில் அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தை கண்டித்து தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கே.ரமேஷ் தலைமையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கார்த்தியாயினி கலந்து கொண்டு கண்டன பேருரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,  கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் அண்ணாமலையார் ஆலயத்தில் பிரியாணி சாப்பிட அனுமதித்த நிர்வாகத்தை கண்டிக்கிறோம்,

பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், கோவிலுக்குள் வரும் பக்தர்களை முறையாக சோதனை செய்ய வேண்டும், கோவிலுக்குள் உள்ளே அனைத்து விதமான கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும்,

கோவிலுக்குள் இடைதரகர்களை அனுமதிக்கக்கூடாது, கோவில் பணியாளர்கள் செய்த தவறுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த வேண்டும், புதிய பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜகவினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் எஸ்.குணசேகரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கிஷோர் குமார், முன்னாள் மாவட்ட தலைவர்கள் நேரு , ஜீவானந்தம், விஜய், கே.ஆர். பாலசுப்பிரமணியம், மாவட்ட துணை தலைவர்கள் சேகர், கிருஷ்ணமூர்த்தி, சிவசங்கர், தீபா, சங்கர், மாவட்ட செயலாளர்கள் அறம் பாலாஜி அறவாழி, ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைதலைவர் டி.எஸ்.சங்கர், மற்றும் மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top