Close
ஜூன் 19, 2025 12:34 காலை

திருவண்ணாமலை கிரிவல பாதையில் புதிதாக வெளிவட்டச் சாலை

கிரிவலப் பாதையில் உள்ள வழிகாட்டி பலகையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறையினர்

திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவல பாதை சந்திப்பில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்க அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடி மதிப்பில் இந்தச் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

முதற்கட்டமாக, அந்தப் பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகளை அகற்றும் பணி, சாலைகளை அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டன. இந்தப் பணியில் தமிழக நெடுஞ்சாலைத் துறையின் வட்ட கண்காணிப்புப் பொறியாளா் கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளா் ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளா்கள், சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வெளிவட்டச் சாலை அமையும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகைகளை அகற்றினா்.

கிரிவல பக்தா்களின் நெரிசலைத் தவிா்க்கவும், போக்குவரத்து வசதிக்காகவும் இந்தப் பகுதியில் வெளிவட்டச் சாலை அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top