Close
ஜூன் 18, 2025 7:11 மணி

தென்காசி மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள்: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் புதிய மினி பேருந்து வழித்தடங்களை வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்கத்தினை மாவட்டஆட்சித்தலைவர் கமல்கிஷோர் முன்னிலையில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 1999-ல் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி குக்கிராமங்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்று இந்த திட்டத்தை கொண்டு வந்தார். அதனை தற்போதைய முதல்வர் விரிவாக்கம் செய்து வருகிறார்.

இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கம் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும் போக்குவரத்து இல்லை என்று மக்கள் சிரமப்படாமல் இருக்க வேண்டும், சிறு கிராமங்களுக்கும் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற அடிப்படையில் நமது முதல்வர் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி உள்ளார்.

நமது மாவட்டத்தில் 103 மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன இன்று 59 புதிய பேருந்துகளை இயக்கி உள்ளோம். இந்தியாவிலேயே அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ள மாநிலமாக நமது மாநிலத்தை தமிழக முதல்வர் உருவாக்கியுள்ளார்.

அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து செல்ல வேண்டும் என்று பகுப்பாய்வு செய்து இந்த திட்டத்தை கொண்டுள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், சதன் திருமலை குமார், ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top