திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
அதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ம் நிதியாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகளை தாமதமின்றி கட்டி முடிக்க வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தின் கீழ் சிறிய அளவிலான மற்றும் பெரிய அளவிலான பழுதுபார்க்கும் பணிகளையும் விரைந்து முடித்து அதற்கான அறிக்கையை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அயோத்திய தாசர் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (கிராமியம்), பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தார். மேலும், குடிநீர் திட்ட பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும், தற்போது தனி அலுவலர்கள் பதிவிக்காலம் நடைபெற்று வருவதால், ஊரக ப்ப கு தி யைச் சேர்ந்த அனைத்து பொது மக்களுக்கும் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் தங்கு தடையின்றி வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அனைத்து களப்பணி அலுவலர்களும் தினசரி அடிப்படையி ல் ஊரகப்பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நேரடியாக மேற்பார்வையிட்டு ஆய்வு செய்யவேண்டும் என்று ஆட்சியர் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், திருவண்ணாமலை செயற்பொறியாளர் ஊரகவளர்ச்சி இளங்கோ, அனைத்து உதவி திட்ட அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வ ட்டார மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




