நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர்கள் சூரி, விமல் ஆகியோர் அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். அவருக்கு கோவில் சிவாச்சாரியார்கள் பிரசாதங்களை வழங்கினார்.
அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் மற்றும் அண்ணாமலையர் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்த அவர்கள் பிடாரி அம்மனை தரிசித்ததுடன் வில்வ மரத்தை சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோவில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பக்தர்கள் என அனைவருடனும் இணைந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். நடிகர்கள் சூரி, விமல்வுடன் பக்தர்கள் பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
உலக நன்மைக்காக மகா யாகம்
திருவண்ணாமலையில் உலக நன்மைக்காக ஸ்ரீ சிவா மகா ஸ்ரீ வாராஹி மற்றும் ஸ்ரீ பாலா திரிபுரா மகா யாகம் நடைபெற்றது.
செங்கம் சாலையில் முதல் நாளான புதன்கிழமை மாலை மகா சங்கல்பம், மகா தீபாராதனை, சிவ வாத்தியங்களுடன் சிவ ஊா்வலம், கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கைகள் நடைபெற்றது.
2-ஆவது நாளான வியாழக்கிழமை மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை, உலக நன்மைக்காக ஸ்ரீசிவா மகா ஸ்ரீவாராகி ஸமித மற்றும் ஸ்ரீபாலாதிரிபுரா மகா யாகம் நடைபெற்றது.
இதில், நடிகர்கள் சூரி, விமல் மற்றும் தொலைக்காட்சி நடிகா், நடிகைகள், தொழிலதிபா்கள், அரசியல் பிரமுகா்கள் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தனியாா் தொலைக்காட்சி காா்த்திக் தேவராஜின் இன்னிசை நிகழ்ச்சி, டிரம்ஸ் சிவமணி இசை நிகழ்ச்சி, தெய்யம் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.




