Close
மார்ச் 7, 2026 3:17 மணி

வேளாண்மை நவீன மயமாக்கல் திட்ட கருத்தரங்கம் : தொடங்கி வைத்த துணை சபாநாயகர்..!

கருத்தரங்கை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், துரிஞ்சலாறு உப வடிநிலப் பகுதி இடைமுகப் பணிமனை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

அரடாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) ஷெமிலா ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பணிமனையை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

கருத்தரங்கை தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக 2 நாட்கள் நடைபெரும் கருத்தரங்கில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்ய ஆலேசனை வழங்கப்பட உள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலே தமிழ்நாட்டில் மட்டும் தான் விவசாயிகள் மேம்பட வேளாண்மைத் துறைக்கென தனியாக சட்டபேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

நமது மாநிலத்தில் கிணற்று நீர் பாசனம் மூலம் நெல் மற்றும் கரும்பு ஆகியவற்றை அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குறைந்த நீரை கொண்டு இஸ்ரேல் அதிகளவில் பழங்கள் உற்பத்தி செய்யும் நாடாக விளங்கிறது. அதேபோல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறைந்த அளவில் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும் அரசின் சார்பில் அதிகளவில் நெல் சாகுபடி செய்யவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய தானியங்களையும், அறுவடை இயந்திரங்களையும் அரசு வழங்கி வருகிறது.

மேலும் சொட்டும் பாசன முறைகளையும், வேளாண்மை துறையில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக அளவில் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்து வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும். மேலும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார், அந்த திட்டங்களை எல்லாம் பெற்று விவசாய பெருங்குடி மக்கள் பயனடைய வேண்டு மென்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் கேட்டுக் கொண்டார்.

விழாவில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மலா்விழி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top