திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், தலைமையில் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மற்றும் அனைத்து அரசு துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் , முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மக்களுடன் முதல்வர் மற்றும் முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் தற்போது வரை நடத்தப்பட்ட முகாம்கள் குறித்தும் இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் நிலுவை யில் உள்ள மனுக்களின் விவரம் குறித்தும் கேட்டறிந்தார். மக்களுடன் முதல்வர் மக்களுடன் முதல்வர், முதல்வரின் முகவரி முகாம்கள் நடைபெறும் இடங்களில் தேவையான அளவிலான குடிநீர், இருக்கைகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திருக்க வேண்டும் எனவும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்ட பணிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு வாரமும் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு கூட்டம் நடத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்,
தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ கோ- ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், அவர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், கலைஞரின் கனவு இல்லம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, ஊரக பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை, குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகதார நிலையங்களின் செயல்பாடுகள் குறித்தும் தற்போது மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் மருத்துவ திட்ட பணிகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியர் நல விடுதிகளில் படுக்கை வசதிகள், குடிநீர் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப் பு கள் ஏற்படுத்தபட்டுள்ளதா என்பது குறித்தும் விடுதிகளில் தங்கிய பயிலும் மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் குறித்தும் ஆய்வு செய்தார்,
முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இயங்கி வரும் தோழி விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்தும், சனமயல் அறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அறையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருவண்ணாமலை நகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைபள்ளியில் மாணவிய ர்களின் வருகைப்பதிவேடு மற்றும் கற்றல்திறன் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மணி, செய்யார் சார் ஆட்சியர் செல்வி பல்லவி வர்மா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.




