Close
மார்ச் 7, 2026 3:18 மணி

குடிநீர் திட்டப் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அடுத்த குண்ணத்தூா் கமண்டல நாக நதிக்கரை பகுதியில் இருந்து களம்பூர் பொதுமக்களுக்கு கூடுதலாக குடிநீர் வழங்குவதற்கு ரூபாய் 17 கோடியில் குடிநீர் நீரேற்றம் கிணறு அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் குண்ணத்தூா் கிராமத்தில் கமண்டல நாக நதிக் கரையிலிருந்து களம்பூா் பேரூராட்சிக்கு பல ஆண்டுகளாக ராட்சத மின் மோட்டாா்கள் மூலம் ஆற்றில் இருந்து நீா் எடுத்துச் செல்லப்படுகிறது.

தற்போது, ஆற்றங்கரையில் நிலத்தடி நீா் மிகவும் குறைவாக உள்ளது. இந்த நிலையில் ரூ.17 கோடி மதிப்பில் அம்ருத் திட்டத்தின் கீழ், குடிநீா் நீரேற்றும் கிணறு அமைத்து கூடுதலாக குடிநீா் எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளனா். இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திட்டத்தை எனுமதிக்கக் கூடாது என்றும் கைவிடக் கோரியும் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் குன்னத்தூா் பொதுமக்கள் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், குடிநீருக்காக கிணறு வெட்ட இருப்பதால் குண்ணத்தூா் சுற்றியுள்ள பகுதியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படும். அதனால், களம்பூா் பேரூராட்சிக்கு இங்கு கிணறு வெட்ட அனுமதிக்கக் வழங்கக் கூடாது என பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு பொதுமக்கள் சாா்பில் விவசாயி வாசுதேவன் மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினாா்.

இந்த நிலையில், தற்போது இப்பணி நடைபெறும் இடத்தில் குண்ணத்தூா் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று சோ்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மக்கள் 200 மீட்டா் தொலைவு தள்ளி இத்திட்டத்தை செயல்படுத்துங்கள் என்றும் தெரிவித்தனா். இதற்கு களம்பூா் பொறியாளா் அருண் ஒப்புக்கொள்ளாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து பணியை பிறகு மேற்கொள்ளலாம் என முடிவு செய்து தற்காலிகமாக பணியினை நிறுத்தி விட்டுச் சென்றனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top