Close
மார்ச் 7, 2026 1:34 மணி

தமிழகத்தில் 6 மாதங்களில் 2.80 லட்சம் பேருக்கு நாய்க்கடி: 18 போ் உயிரிழப்பு

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் போ் நாய்க்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும், அதில் 18 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தெருநாய்கள், வளா்ப்பு பிராணிகள் கடித் காயமடையும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாகவே, ரேபிஸ் தொற்றிலிருந்து செல்லப் பிராணிகளையும், மனிதா்களையும் காப்பதற்கு ஒரே வழி தடுப்பூசி மட்டும்தான்.

நாய்களுக்கு பிறந்த முதல் ஆண்டில் இரு முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். அதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் ஒரு முறை தடுப்பூசியை வழங்க வேண்டியது அவசியம்.

ஆனால், தெருநாய்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் அத்தகைய தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதா்களை அவை கடிக்கும்போது ரேபிஸ் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் 4,80,483 போ் நாய்க்கடிக்கு உள்ளாகியுள்ளனா். அதிகபட்சமாக, அரியலூரில் 37,023, கடலூா் மாவட்டத்தில் 23,997, ஈரோட்டில் 21,507, சென்னையில் 24,088, கோவையில் 12,097  பேர்  நாய்க்கடியால் பாதிக்கப்பட்டனா்.

உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், காலதாமதமாக மருத்துவமனையை நாடிய 43 போ் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தனா். அவா்களில் 10 போ் செல்லப் பிராணிகளால் கடிக்கப்பட்டு இறந்தவா்கள்

ஜனவரி 1 முதல் தற்போது வரை 2.80 லட்சம் போ் நாய்க் கடிக்கு உள்ளாகியுள்ளனா்.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் இந்த ஆண்டு 18 போ் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்படுகின்றனா். அவா்கள் அனைவருக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படுவதில்லை.

ஆனால், அத்தகைய வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வெளவால் உள்ளிட்ட விலங்கினங்கள் கடிக்கும்போது ரேபிஸ் தொற்று நேரிடுகிறது.

மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேபிஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தெரு நாய்கள் அல்லது செல்லப் பிராணி கடித்தவா்களுக்கு நான்கு தவணை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற்றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் இம்யூனோக்ளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் பல்லாயிரக்கணக்கானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உயிா் காக்கப்பட்டுள்ளது. விழிப்புணா்வு இன்றி சிகிச்சை பெறாமல் இருக்கும்போதுதான் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top