Close
மார்ச் 7, 2026 4:46 மணி

மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மேற்பார்வை குழு கூட்டம்..!

மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மேற்பார்வை குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம்,

தமிழ்நாடு சட்டமன்றத் துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் உறுப்பினர் செயலாளர் தர்ப்பகராஜ், முன்னிலையில் , தலைவர் மற்றும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை கலந்து கொண்டார் .மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, அம்பேத்குமார், ஜோதி ஆகியோர் கலந்து கொண்டார்.

மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மேற்பார்வை குழு கூட்டம்

கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சமூக நலத்துறை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மற்ற துறைகளில் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட பணிகள், பாரதப் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம், விகாஸ் யோஜனா திட்டம், வேளாண் திட்டம், தேசிய நலச்சங்கம், தாட்கோ, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்,

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய சுகாதார இயக்கம், தேசிய வேளாண்மை சந்தை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ,மதிய உணவு திட்டம், தேசிய நில ஆவண மேலாண்மை திட்டம், மாவட்ட மின் ஆளுமை சங்கம், மாவட்ட தொழில் மையம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்,

தேசிய சமூக நல திட்டம், உணவு பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் நலம், தேசிய நெடுஞ்சாலைத்துறை, பொது சேவை மையங்களில் பயன்பாடு, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட மின்சார குழு தலைவர் அண்ணாதுரை தலைமையில் மின்சார குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மின்சார துறை சார்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சார மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மணி, மகளிர் திட்ட இயக்குனர் சரண்யா தேவி, திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையாளர் செந்தில் பாலாஜி, செயற்பொறியாளர்கள், மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top