Close
மார்ச் 7, 2026 4:53 மணி

முதலமைச்சர் நினைக்கும் திட்டங்களை செய்து முடிப்பவர் அமைச்சர் எ.வ.வேலு,சுற்றுலாத்துறை அமைச்சர் புகழாரம்..!

விழாவில் நல திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்கள்

முதலமைச்சர் நினைக்கும் திட்டங்களை உடனுக்குடன் செய்து முடிப்பவர் எதிலும் வல்லவர் கருணையின் சுடர் விளக்கு என்று போற்றப்படும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜவ்வாதுமலை 25 ஆம் ஆண்டு கோடை விழாவில் 18062 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஒரு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி 17 புதிய கட்டடங்கள் ஆகிய வளர்ச்சி பணிகளை ரூ132.02 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் .

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி, ஜோதி, அம்பேத்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசுகையில்;

இந்த ஜவ்வாது மலை வாழ் மக்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்துவதற்காக பல திட்டங்களும் சலுகைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதில் ஜவ்வாதுமலையை சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சுற்றுலாத்தலமாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஜவ்வாதுமலையில் சுற்றுலா மாளிகை, சுற்றுலா தளம், தேவையான கண்காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், போட்டிங் ஹவுஸ், போன்ற ஏராளமான பூங்காக்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஜவ்வாதுமலையில் மலைவாழ் மக்கள் அவர்கள் பகுதியில் விளையும் விலை பொருட்களுக்கு அரசு நிர்ணயிக்கும் நியாயமான விலைகளை கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் அளவுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் தொழிற்பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஜவ்வாதுமலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விழாவின் போது 26 துறை கொண்ட கண்காட்சிகள் 36 அரங்குகள் கொண்ட ஸ்டால் மூலம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது, இத்தனை திட்டங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினாலும், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணன், கிரி ஆகியோராலும் பல வளர்ச்சி பணிகளும் பல திட்டங்களும் சலுகைகளும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் முதலமைச்சர் என்ன நினைக்கிறாரோ அந்த திட்டங்களையும் அந்த செயல்பாடுகளையும் ஓர் இமை கூட தவறாமல் செய்து முடிப்பவர். அதேபோல் முதலமைச்சர் நினைக்கும் திட்டங்களை உடனுக்குடன் செய்து முடிப்பவர் எதிலும் வல்லவர் கருணையின் சுடர் விளக்கு என்று போற்றப்படும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு,

தன் தொகுதிக்கு செய்ததை விட கலசபாக்கம் தொகுதி, செங்கம் தொகுதி ஆகிய தொகுதிகளுக்கு ஏராளமான வளர்ச்சிப் பணிகளும் நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறார். அதேபோல் அவர் துறையில் உள்ள நெடுஞ்சாலை துறை மூலம் பல மேம்பாலங்கள் பல சாலைகள் அனைத்தும் உடனுக்குடன் அமைத்துக் கொடுத்து வருகிறார், இதனால் கலசபாக்கம் தொகுதியும், செங்கம் தொகுதியும் வளர்ச்சியான தொகுதியாக மாறி வருகிறது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.ராஜேந்திரன் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்டத் திட்ட இயக்குனர் மணி, சுற்றுலாத்துறை அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top