நாமக்கல் :
விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிப்பதைக் கண்டித்து, நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் முன்பு,தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஆதிநாராயணன் தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் முகமது அலி பங்கேற்றுப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் தண்ணீருக்கு, மத்திய அரசு வரி விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விவசாயத்தை கேள்விக்குறியாக்கும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. சங்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




