Close
ஏப்ரல் 24, 2026 10:44 காலை

இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக 1,008 குத்துவிளக்கு பூஜை : முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு..!

தமிழக முதல்வராக மீண்டும் இபிஎஸ் வரவேண்டி, நாமக்கல்லில் நடைபெற்ற 1,008 குத்துவிளக்கு பூஜையில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்எல்ஏ., சரோஜா, ப.வேலூர் எம்எல்ஏ சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாமக்கல் :

இபிஎஸ் மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி, நாமக்கல்லில் நடைபெற்ற 1,008 குத்துவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றிபெற்று, தமிழக முதல்வராக மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வரவேண்டி, நாமக்கல் மாவட்டமகளிரணி சார்பில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 1,008 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் வைரம் தமிழரசி தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்எல்ஏ, முன்னாள் அøமைச்சர் டாக்டர் சரோஜா, ப.வேலூர் எம்எல்ஏ சேகர் உள்ளிட்ட திரளான அதிமுக நிர்வாகிகள் பூஜையில் கலந்துகொண்டனர். முன்னதாக கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடர்ந்து, 1,008 பெண்கள் நீண்ட வரிசையில் குத்துவிளக்குகளின் முன்பு அமர்ந்து அர்ச்சனைகள் செய்து பூஜையில் ஈடுபட்டனர். திரளான அதிமுக மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிரணியினர் பூஜையில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top