Close
மார்ச் 7, 2026 4:26 மணி

ஓரணியில் தமிழ்நாடு பிரசாரத்தில் பொது மக்களை வீடு வீடாக நேரில் சென்று சந்திக்க காஞ்சிபுரம் திமுக நிர்வாகிகள் திட்டம்

தமிழகத்தில் மண் , மொழி, மானம் காக்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பேரில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள பொது மக்களை வீடு வீடாக நேரில் சென்று திமுக நிர்வாகிகள் சந்திக்க உள்ளதாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் திமுக தலைவருமான ஸ்டாலின் புதியதாக ஓரணியில் தமிழ்நாடு எனும் வாசகத்தை முன்னிறுத்தி பிரச்சார இயக்கத்தையும் அதனுடன் புதிய உறுப்பினர் சேர்க்கையும் நடத்திட திட்டமிட்டு அதனை துவக்கி வைத்துள்ளார்.

அவ்வகையில் வரும் 3ம் தேதி துவங்கவுள்ள நிலையில் , காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் இன்று பத்திரிக்கையாளர்களை கலைஞர் பவள விழா மாளிகையில் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் உத்திரமேரூர் மதுராந்தகம் செய்யூர் உள்ளிட்ட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1180 வாக்குச்சாவடிகளில் உள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை வீடு வீடாக சென்று திமுக அரசின் சாதனைகளையும் அதன் செயல்திட்டங்களையும் உரிமை போராட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்து சொல்லி ஒவ்வொரு வாக்காளரையும் ஓரினியில் தமிழ்நாடு என்ற பிரச்சார இயக்கத்தில் இணைக்க நிர்வாகிகள் வரும் 45 நாட்களுக்கு செயல்படுவார்கள் என தெரிவித்தார்.

தமிழகத்தின் மண் மொழி மானம் ஆகியவற்றை காப்பாற்றிட இதுபோன்ற பிரச்சார இயக்கத்தை அவர்களுக்கு விளக்கி அவர்கள் விரும்பினால் விண்ணப்ப படிவம் மற்றும் நேரடி ஆன்லைன் மூலம் உறுப்பினராக சேர்க்கப்படுவார் என தெரிவித்தார்.

இரண்டு முக்கிய குறிக்கோளுடன் இந்த ஓரணியில் தமிழ்நாடு எனும் பிரச்சார இயக்கம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் முழுமையாக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top