Close
மார்ச் 7, 2026 6:04 மணி

திருவண்ணாமலையில் ரூ.1.28 கோடியில் வகுப்பறை கட்டிடங்கள் திறந்து வைத்த அமைச்சர்

கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ.1.28 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியும் வருகிறது.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வித் துறைக்கு பல புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட காட்டாபூண்டி ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. ஒரு கோடியே 28 லட்சத்தில் கூடுதலாக 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.

இந்த புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

இதில், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்து வகுப்பறைகளை பாா்வையிட்டாா்.

மேலும், பள்ளியின் பொதுத்தேர்வு தேதர்ச்சி சதவீதம், மாணவர்களில் கற்றல் திறன், பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். புதிய வகுப்பறைகள் கட்டி கொடுத்ததற்கு, மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் க.கௌதமன், திமுகவைச் சோ்ந்த முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தரக்கட்டுப்பாடு ஆய்வக கட்டிடம் திறப்பு

அதனைத் தொடர்ந்து  கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு ஆய்வக கட்டிடத்தினை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் க.கௌதமன், மாநில பொறியாளர் அணி செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் ,மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top