Close
மார்ச் 7, 2026 3:01 மணி

நாமக்கல்லில் ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட ஆர்டிஓ சுப்பிரமணி, அவரது மனைவி பிரமிளா

நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்டிஓ மற்றும் அவரது மனைவி அரசு பள்ளி ஆசிரியை ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்டனர்.

நாமக்கல் அன்பு நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (55) ஆர்டிஓ, இவர் ஏற்கனவே, சங்ககிரியில் பணியாற்றி வந்த சரவணன் தற்போது, திருச்சியில் ஆர்டிஓவாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரமிளா (51), ஆண்டாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மகள் சம்யுக்தா (25), வெளிநாட்டில் படித்து முடித்துள்ளார். மகன் ஆதித்யா (21), எம்பிபிஎஸ் படித்து வருகிறார். தற்போது, நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள கலைவாணி நகரில் அவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆர்டிஓ சுப்பிரமணி, அவரது மனைவி பிரமிளா ஆகிய இருவரும், நாமக்கல், மோகனூர் ரோட்டில் உள்ள வகுரம்பட்டி அருகே ரயில் பாதையில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

இது குறித்து, சேலம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.

குடும்பப்பிரச்சினை காரனமாக அவர்கள் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top