பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்தநிலையில் ஆனி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பௌர்ணமி வருகிற 10-ம் தேதி( வியாழக்கிழமை) அதிகாலை 2.34 மணிக்கு தொடங்கி மறுநாள் 11-ம் தேதி (வெள்ளிக்கிழமை ) அதிகாலை 3.08 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது சிறந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்தது.
ஆனி மாத பெளர்ணமி சிறப்பு
பொதுவாகவே பெளர்ணமியில் சிவ பெருமானை வழிபடுவது சிறப்புக்குரியதாகும். அதுவும் ஆனி மாதத்தில் வரும் பெளர்ணமி அதிக சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் வீட்டின் பூஜை அறையில் சில குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் கேட்ட வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆனி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் கடைசி மாதம் என்பதால் இந்த மாதத்தில் வரும் பெளர்ணமியும் தட்சிணாயன காலத்தில் வரும் கடைசி பெளர்ணமி என்பதால் சிவ பெருமான், விநாயகர், துர்க்கை அம்மன் ஆகியோரை வழிபட மிகவும் சிறப்பானதாகும். பெளர்ணமியில் குலதெய்வத்தை வழிபடுவது, சந்திரனை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.
10-ம் தேதி(வியாழக்கிழமை) நாள் முழுவதும் பெளர்ணமி திதி இருந்தால் இந்த நாளில் சிவபெருமானுக்கு அபிஷேகம், வாசனை மலர்களால் அர்ச்சனை வழிபடுவது சிறப்பு. அதோடு மாலை 6 மணிக்கு பிறகு ஒரு குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபடுவதால் நாம் கேட்ட வரங்கள் எதுவாக இருந்தாலும் கிடைக்கும். சுகபோகமான வாழ்க்கை, செல்வத்திற்கு காரணமான கிரகம் சுக்கிரன் என்பதாலும், மனோகாரகனான சந்திரனுக்கும் உரிய நாள் என்பதால் அவர்கள் மனம் குளிர இப்படி வழிபட்டால் கேட்ட வரங்கள் நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்




