காஞ்சிபுரம் பெண் படுகொலை வழக்கில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நிலையில் உண்மையை வெளியில் சொல்லி விடுவாரோ என எண்ணி கொலை செய்ததாக கொலையாளி செந்தில்நாதன் அதிர்ச்சி வாக்குமூலம்
கைது செய்யப்பட்ட செந்தில்நாதனிடமிருந்து பெண்மணி அணிந்திருந்த 6 சவரன் தங்க நகைகளும் மீட்டப்பட்டது
காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தில் செயல்பட்டு வரும் அட்டைபெட்டி உற்பத்தி செய்யும் கம்பெனியில் ஆண்டி சிறுவள்ளூர் பகுதியைச் சார்ந்த எப்சி மேரி என்ற 41 வயதுடைய பெண்மணி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே பணியில் சேர்ந்து தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வாரம் சனிக்கிழமை மாலை பணி முடிந்து வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த எப்சி மேரியின் கணவர் உறவினர்களுடன் மூடப்பட்டிருந்த கம்பெனியில் தேடிய போது அட்டைகளுக்கு இடையே தலையில் பலந்த காயங்களுடன் சிதைந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து உடனடியாக பொன்னேரிக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் எப்சிமேரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தடயங்களை சேகரித்து எப்சிமேரியை கொலை செய்தவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் எப்சி மேரி பணிபுரிந்த அட்டை பெட்டி கம்பெனிக்கு அவரது உறவினர்கள் சென்ற சென்ற போது உடன் பணிபுரிந்த செந்தில்நாதன் என்பவர் கடைசியாக அங்கிருந்து தப்பி சென்றதும், அவரது தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது போலீசாருக்கு சந்தேகம் வர அவனை தேடிய போது அவன் தலைமறைவாக இருந்தது போலீசாரின் சந்தேகங்களுக்கு விடை கிடைத்து.
இதனையெடுத்து தொடர்ந்து போலீசாரின் மூன்று நாள் தேடுதலுக்கு பின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் செந்தில்நாதன் இருப்பது போலீசாருக்கு தெரியவர அங்கு சென்ற போலீசார் செந்தில்நாதன் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியூட்டும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அதில் மாலை வேளையில் எப்சி மேரி தனியாக இருந்த நிலையில் அவரிடம் செந்தில்நாதன் பாலியல் தொந்தரவு செய்ததும், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததும் அதற்கு இடம் கொடுக்காத எப்சிமேரி வெளியில் சொல்லி விடுவாரோ என எண்ணி கொலை செய்ததும், அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்று எவரோ நகைக்காக கொலை செய்திருக்கலாம் என போலீசாரை நம்ப வைக்க இத்தகைய நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
இதனையெடுத்து செந்தில்நாதனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து எப்சி மேரியின் 6சவரன் தங்க நகைகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.




