Close
மார்ச் 7, 2026 4:39 மணி

அண்ணாமலையார் திருக்கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்

கிரிவலம் வந்த நடிகை ரோஜா

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நிர்வாகியும் நடிகையுமான ரோஜா செல்வமணி  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது அண்ணாமலையார் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக கடந்த சில மாதங்களாகவே திரைப்பட நடிகர், நடிகைகள் ஒளிப்பதிவாளர்கள், இயக்குனர்கள் , தொழிலதிபர்கள் , முக்கிய பிரமுகர்கள் என அண்ணாமலையாரை தரிசித்து வரும் நிலையில் ஆந்திர மாநில முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரும், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையுமான ரோஜா தனது தோழிகளுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஆனி மாத பௌர்ணமி தொடங்க உள்ள நிலையில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தரோஜா திருக்கோவிலில் உள்ள சம்பந்த விநாயகரை தரிசனம் செய்து பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்ததுடன் வைகுந்த வாயிலில் நின்றபடி 2668 அடி உயரம் கொண்ட தீப மலையை மனமுருக வழிபட்டார்.

திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ரோஜாவிற்கு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கோவில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பக்தர்கள் என அனைவருடனும் இணைந்து குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக நேற்று இரவு  14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் ரோஜா கிரிவலம் மேற்கொண்டு அஷ்ட லிங்க திருக்கோவில்களிலும் கற்பூரம் ஏற்றி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top