Close
மார்ச் 7, 2026 6:25 மணி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்..!

கோப்பு படம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்.

பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு கல்வித் தகுதிகள் தேர்ச்சிப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ச்சியாக பதிவினை புதுப்பித்து வருபவர்கள் 30.06.2025- ம் தேதியின் நிலவரப்படி 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களாக இருப்பின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், பிற்பட்டவகுப்பினர், மிகவும் பிற்பட்டவகுப்பினர், இதரவகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை, அரசின் பிறதுறை மூலம் உதவித்தொகை பெறுபவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க இயலாது.

ஒரு பதிவுதாரருக்கு ஒருமுறை மட்டுமே உதவித்தொகைவழங்கப்படும். 10ஆம் வ கு ப் பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200ம், 10-வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 ம், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு மாதம் ரூ.400 ம் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600ம் மேல்நிலை வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ750 ம். பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 ம் உதவித்தொகை வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட தகுதிகள் உள்ளவர்கள் திருவண்ணாமலை . மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெறப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ அல்லது www.tnvelaivaaippu. gov.in என்றவேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்திலோ பூர்த்தி செய்து வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட அலுவலரிடமிருந்து பெறப்பட்ட சான்றும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதார் அட்டை மற்றும் அனைத்து கல்விச்சான்றுகள் அசல் மற்றும் நகல்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 29.08.2025- க்குள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வருமானசான்று தேவையில்லை என்பதால் மேற்குறிப்பிட்ட இதர ஆவணங்களுடன் அலுவலக வேலை நாட்களில் நேரில் வருகை புரிந்து விண்ணப்பம் அளித்து சேர்க்கைக்கான அனுமதி பெறலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்  தர்ப்பகராஜ் , தெரிவித்துள்ளார் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top