Close
மார்ச் 7, 2026 1:23 மணி

ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் : 8 தாலுகாவில் 116 மனுக்களுக்கு உடனடி தீர்வு..!

கோப்பு படம்

நாமக்கல் :

நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்காளில் நடைபெற்ற ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாமில், மாவட்டத்தில் 116 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோகத் திட்டத்தின் மூலம், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன்கார்டு கோருதல், மொபைல் போன் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ள, பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், ஒவ்வொரு மாதமும், 2 ஆவது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.

அதின்படி, இம்மாதத்திற்கான ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர் நாள் முகாம், மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலூர், குமாரபாளையம் உள்ளிட்ட 8 தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் நடந்தது. அந்தந்த வட்ட வழங்கல் தாசில்தார்கள் தலைமை வகித்தனர்.

நாமக்கல் தாலுகாவில், வட்ட வழங்கல் தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், மொபைல் எண் சேர்த்தல் குறித்து, 26 மனுக்களை அளித்தனர். மாவட்டம் முழுவதும், 8 தாலுகாக்களில் நடந்த முகாமில், ரேஷன் கார்டுகளில் திருத்தம் கோரி மொத்தம் 16 மனுக்கள் வரப்பெற்றன. அனைத்து மனுக்களும் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top