Close
ஏப்ரல் 23, 2026 11:34 மணி

கொல்லிமலையில் கள்ளச்சாராயம் : நாமக்கல் போலீஸ் எஸ்.பி. தொடர் ஆய்வு..!

நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், கொல்லிமலைப் பகுதியில், கள்ளச்சாராயம் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் :

நாமக்கல் போலீஸ் எஸ்.பி. கொல்லிமலைப் பகுதியில், கள்ளச்சாராயம் குறித்து நேரடி தொடர் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன், கொல்லிலமலையில் முள்ளுக்குறிச்சி முதல் பெரப்பன்சோலை, நவக்காடு வரை உள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் சம்மந்தமாக நேரடி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மதுவிலக்கு பிரிவு ஏடிஎஸ்பி தனராசு கலந்துகொண்டார். ஆய்வின் போது பழைய மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது மறுவாழ்வுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் பொதுமக்களிடம் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர், விற்பனை செய்பவர்களை தண்டிக்கும் வகையில் அரசு கடுமையான சட்டம் இயற்றியுள்ளது எனவே யாரும் கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடக்கூடாது என்பதை வலியுறுத்ததினார். மேலும், கள்ளச்சாராயம் குடிப்பதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதன் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், கள்ளச்சாராயம் குறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பொதுமக்களிடம் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top