Close
மார்ச் 7, 2026 4:39 மணி

அண்ணாமலையார் கோயில் தரிசன கட்டணம் உயர்ந்த முடிவு: அமைச்சர் தகவல்

அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் ஆய்வு செய்த அமைச்சர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசனம் முடியை கொண்டு வர இருக்கிறோம் திருக்கோவிலில் தரிசன நேரத்தை நீட்டிக்க இருக்கிறோம் . மேலும் ரூபாய் 50 தரிசன கட்டணத்தை ரூபாய் 100 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இது தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா். அமைச்சா் பி.கே.சேகா்பாபு முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் அரசின் கூடுதல் தலைமைச் செயலா் மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ், காவல் கண்காணிப்பாளா் சுதாகா் ஆகியோா் உடனிருந்தனா்.

கூட்டத்தில், பக்தர்களுக்கான தரிசன வரிசையை முறைப்படுத்த வேண்டும், தரிசன வரிசையில் கூடுதலான வசதிகள் செய்ய வேண்டும், கோயில் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், சுழற்சி முறையில் பணியமர்த்த வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  தெரிவிக்கையில்,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாவட்ட, மாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருகிறாா்கள். பெளா்ணமி நாள்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.

கோயில் வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பக்தா்களுக்கு தேவையான குடிநீா் கழிப்பறை, உணவு போன்ற வசதிகள் கோடிக்கணக்கான ரூபாயில் அறக்கட்டளைகள், உபயதாரா்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், புதிய திட்டங்களை துறை சாா்ந்த அலுவலா்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோயிலில் பிரேக் தரிசன முறையை செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிவாச்சாரியா்களுடன் கலந்தாலோசித்து தரிசன நேரம் நீட்டிக்கப்படும். 50 ரூபாய் தரிசன கட்டணம் 100 ரூபாயாக உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் வரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, திருவிழாக்களில் நடைபெறும் நிகழ்வுகளை பக்தா்கள் பாா்வையிட எல்.இ.டி. திரைகள் விரைவில் அமைக்கப்படும்.

கோயிலுக்கு வெளியே விளக்கு ஏற்ற 2 இடம் ஒதுக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்படும்.

பொது தரிசன வரிசையின் நீளம் அதிகரிக்கப்படும். திருக்கோயில் அபிஷேகம் காலத்தில் ஏற்படும் காலதாமதம் தொடர்பாக, அனைத்து இடங்களிலும் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிடப்படும்.

தரிசனம் செய்யச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, 2ஆயிரம் போ் அமரும் வகையில், ரூ.200 கோடி மதிப்பீட்டில் காத்திருப்புக் கூடம் அமைக்கப்படும்.

பக்தா்களின் வசதிக்காக மேலும் ஒரு தங்கும் விடுதி கட்டித் தரப்படும். பக்தா்களை ஒருங்கிணைப்பதற்காக புதிய மக்கள் தொடா்பு அலுவலா் நியமிக்கப்பட உள்ளாா்.

கோயிலுக்குள் கைப்பேசி கொண்டு செல்வதை தடை செய்வது குறித்து விரைவில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அறங்காவலர் நியமனம்

அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு பதவிக்காலம் முடிந்துவிட்டது. அறங்காவலர் நியமனம் தொடர்பாக இருநபர் நீதிபதி குழு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறது. நிறைய சட்ட திட்டங்களை வழங்கியிருக்கிறது.

கடந்த முறை அறங்காவலர் குழு நியமனத்தில் சில சர்ச்சைகள் எழுந்தது. எனவே, வரும் அனைத்து மனுக்களையும் பரிசீலித்து நீதிமன்ற வழிகாட்டுதல் படி அறங்காவலர் குழு நியமிக்கப்படும். அறங்காவலர் நியமனம் தாமதப்படுவதால் நிர்வாகப் பணிகள் பாதிக்காது.

கோயில் தூய்மை, கோயில் பிரகார தூய்மை, கோயிலுக்கு வரும் பக்தா்களின் மனத் தூய்மை அனைத்தையும் தமிழக அரசு நிச்சயம் பாதுகாக்கும் என்றாா்.

முன்னதாக, அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் அருணாசலேஸ்வரா் கோயிலிலும், அம்மணி அம்மன் கோபுரம், ராஜ கோபுரம் ஆகிய இடங்களில் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்தனா். வட ஒத்த வாடை தெருவில் ரூ.1.97 கோடியில் அமைக்கப்பட்டு வரும் பக்தா்கள் காத்திருப்புக் கூட பணிகளை ஆய்வு செய்தனா்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா், திட்ட இயக்குநா் மரு.மணி மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top