Close
மார்ச் 7, 2026 6:08 மணி

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் துர்காமூர்த்தி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ. 1.13 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் துர்காமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 575 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்ற கலெக்டர் அவற்றை பரிசீலனை செய்து, உரிய அதிகாரிகளிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கான காசோலை, முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு மாடு வளர்ப்பு கடனுதவிக்கு வட்டி மானியமாக ரூ. 5,114க்கான காசோலை, நாமக்கல் மாநகராட்சி வார்டு எண். 27ல், வசிக்கும் 3 நபர்களின் கூரைவீடு தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு, சமையல் பாத்திரங்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒருவருக்கு ரூ. 1,950 மதிப்பில் பிரெய்லி கடிகாரம் மற்றும் ஒருவருக்கு ரூ. 6,840 மதிப்பில் இலவச தையல் மெசின் என மொத்தம் 7 பேருக்கு ரூ. 1.13 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

டிஆர்ஓ சுமன், கலெக்டரின் நேர் முக உதவியாளர் குமரன், சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி உள்ளிட்டேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top