Close
ஏப்ரல் 24, 2026 12:56 காலை

நாமக்கல்லில் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்..!

மீன் வளர்ப்பு- கோப்பு படம்

நாமக்கல்:

நாமக்கல்லில் வரும் 27ம் தேதி நன்னீர் மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நன்னீர் மீன் வளர்ப்பில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் உணவு மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மீன்பண்ணைக் குட்டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணைக் குட்டை அமைத்தல், மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண்மை முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானியத் திட்டங்கள், சந்தைப்படுத்துதல் முறைகள் பற்றியும் விரிவாக கற்றுத்தரப்படும்.

இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த ஆண்டிற்கான மீன் குஞ்சுகள் இடுபொருட்கள் வழங்குவதில், நாமக்கல் மாவட்ட மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியில், வேலையில்லா பட்டதாரிகள், விவசாயிகள், இல்லத்தரசிகள், மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். விருப்பமுள்ளவர்கள் 04286 – 266345, 266650, 7358594841 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என அறிவியல் நிலையத்தின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top