நாமக்கல்:
நாமக்கல்லில் வரும் 25ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து, கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்து, விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார்.
கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, வேளாண் இடுபொருள் இருப்பு விபரங்கள், வேளாண் உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத்திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.




