பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாகவும், அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த மாநில கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்தநிலையில் ஆடி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பௌர்ணமி வருகிற 8-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.43 மணிக்கு தொடங்கி மறுநாள் 9-ம் தேதி (சனிக்கிழமை) பிற்பகல் 2.18 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது சிறந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆடி மாத பெளர்ணமி சிறப்பு
ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும்போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும்.
ஆடிப் பெளர்ணமி வழிபாட்டு பலன்கள் : அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சாற்றி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால் குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.
ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும். குழந்தைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும், ஞானமும் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்.
ஆடி பௌர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதால் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும். வியாபாரங்களில் எதிர்ப்புகள் நீங்கி லாபங்கள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் என்பது நம்பிக்கையாகும்.




