ஆடி மாத பௌர்ணமியொட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், காலை முதல் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
இந்த ஆண்டு ஆடி மாத பௌா்ணமி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.43 மணிக்குத் தொடங்கி சனிக்கிழமை பிற்பகல் 2.18 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது.
ஆனால், வெள்ளிக்கிழமை காலை முதலே பக்தா்கள் கிரிவலம் வரத்தொடங்கினா். மாலை 4:30 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இரவு 8 மணிக்குப் பிறகும் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.
தொடா்ந்து, சனிக்கிழமை காலை வரை பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டனா். மேலும், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகளிலும் ஏராளமான பக்தா்கள் காத்திருந்து வழிபட்டனா்.
மேலும் இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.
மழையில் கிரிவலம் வந்த பக்தர்கள்
திருவண்ணாமலையில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் சுமார் இரண்டு மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழை பெய்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் குடைகள் மற்றும் மழைக்கோட்டுகள் அணிந்து கிரிவலம் வந்தனா்.
திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இங்கிருந்து சிறப்புப் பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
பக்தா்களின் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.




