Close
மார்ச் 7, 2026 2:51 மணி

தென்காசியில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு முப்புரிநூல் அணியும் விழா மற்றும் வேத மந்திர பயிற்சி வகுப்புகள்

ஆவணி அவிட்டம் நாளான இன்று ஏராளமானவர்கள் பூணூல் அணியும் சடங்குகளை நடத்துவதுண்டு. பிராமணர்கள் மட்டுமல்லாது, வேறு சில சமூகத்தினரும் பூணூல் அணிவது உண்டு

அந்த வகையில் தென்காசியில் இன்று திருவள்ளுவர் சமுதாயத்தினர் பூணூல் அணிந்து வேத மந்திர பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். தென்காசி திருவள்ளுவர் கல்வி டிரஸ்ட் மற்றும் மற்றும் வி.பி.எஸ் வேத பாடசாலை சார்பில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சமுதாயத்தினர் பூணூல் அணியும் நிகழ்ச்சியும் வேத மந்திர பயிற்சி வகுப்பும் நடந்தது

தென்காசி சிற்றாற்றங்கரையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் ஜி.மாடசாமி சோதிடர் தலைமை வகித்தார். பண்டிட் ஸ்ரீதர் ஜோதிடர் பூணூல் அணியும் நிகழ்ச்சி மற்றும் வேத மந்திர பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வைத்தார் . முன்னதாக கணபதி ஹோமமும் காயத்ரி பூஜை நடந்தது.

பூஜைகள் முடிந்து ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பூணூல் அணிந்து கொண்டனர். பின்னர் வேத மந்திர பயிற்சி வகுப்புகள் நடந்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top