Close
மார்ச் 7, 2026 1:24 மணி

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய அப்ரெண்டிஷ்சிப் மேளா 2025 மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் 11.08.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் அரசு போக்குவரத்து கழகம், செய்யார் சர்க்கரை ஆலை போன்ற முன்னணி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தொழிற் பழகுநர் பயிற்சிக்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.

என்.சி.வி.டி. மற்றும் எஸ்.சி.விடி முறையில் அரசு மற்றும் தனியார் ஐடிஐ.யில் 2024ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அல்லது 2024ம் ஆண்டிற்கு முன்னதாக தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் டிரேட் அப்பரன்டிசாக இந்த பயிற்சியில் சேரலாம்.

ஐடிஐ-யில் சேர்ந்து பயிற்சி பெற முடியாத 8,10,12-ம் வகுப்பு, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் பிரஷர் அப்பரன்டிசாக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படைபயிற்சியும் ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை தொழிற்பழகுநர்பயிற்சி பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.

தொழிற்பழகுநர் பயிற்சிக்குப் பின் டிஜிடி பயிற்சியால் வருடத்திற்கு 2 முறை நடத்தப்படும் தொழிற்பழகுநர் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மேலும் அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. இம்முகாமிற்கு வருகைபுரியும் பயிற்சியாளர்கள் wwwapprenticeshipinidagov.in என்ற போர்ட்டலில் பதிவு செய்து அதன் விவரத்தினையும் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களும் எடுத்துவருமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top