Close
மார்ச் 7, 2026 1:41 மணி

மேலகரம் பேரூராட்சி தலைவர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த திமுக கவுன்சிலர்

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர்கலுக்கு கமிஷன், கலெக்சன்களுக்கு துணை போகும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பணிகள் நடப்பதாக திமுக கவுன்சிலர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்குட்பட்ட 11 வது வார்டு எந்த பணிகளும் நடைபெறாமல் தொடர்ந்து தலைவர் மற்றும் துணைத் தலைவரால் புறக்கணிக்கப்படுவதாக திமுக கவுன்சிலர் நாகராஜ் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து புகார் மனு அளித்தார்.

இந்த புகார் மனுவில், தனது வார்டில் ஐந்து அடி குழாய்களை அப்புறப்படுத்தி புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் தொட்டி வைத்திட கடந்த மூன்று ஆண்டுகளாக மன்றத்தில் கோரிக்கை வைத்து வருகின்றேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இதே போன்று உயர் கோபுர மின்விளக்கு, சிறுவர் பூங்கா, கழிவுநீர் ஓடைகள் ஆகியவை குறித்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பேரூராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்கு ரூபாய் 30,000 வாங்குவதாகவும் இதில் ரசீது கொடுக்கும் தொகை போக மீதி பணத்தை சுருட்டி விடுகின்றனர்.

தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கு கமிஷன் கலெசன்களுக்கு துணை போகும் கவுன்சிலர்களுக்கு மட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. நான் குறைகளை சுட்டி கட்டு வரும் நிலையில் எனது வார்டில் பணிகள் நடைபெறாத நிலையில் எனது வார்டு பகுதி மக்கள் மிகுந்த பாதிப்படைகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top