திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அருணை மருத்துவக் கல்லூரி
அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நாட்டின் 79- ஆம் ஆண்டு சுதந்திர விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரி இயக்குனர் எ.வ.வே.கம்பன் இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை எ. வ. வேலு பெண்கள் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 79-வது இந்திய சுதந்திர தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளியின் நிர்வாக இயக்குநர் எ.வ.வே.கம்பன் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து எ.வ.வே. கம்பன் பேசுகையில், சுதந்திரப்போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தார், இரத்தம் சிந்தி அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் எனவும், இது போன்ற விழாக்களைப் பயன்படுத்தி மாணவிகள் தங்கள் தனித் திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் எனவும் மாணவிகளைக் கேட்டுக் கொண்டார். மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பள்ளி முதல்வர் கிரேசி ஆண்டனி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுதந்திர தினத்தைப் போற்றும் வகையில் நடைபெற்றது. விழாவில் மாணவிகள், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன..
திருவண்ணாமலை எஸ்.கே.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 79-வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் எஸ் கே பி கல்வி குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயலாளர் ரங்கசாமி முதன்மை நிர்வாக அதிகாரி சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரியின் முதல்வர் முனைவர்.
முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தி மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ் பேராசிரியை சித்ரா, உடற்கல்வி இயக்குனர் செந்தில் மற்றும் பிஆர்ஓ சை.சையத் ஜஹிருத்தீன், பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தியாகி நா.அண்ணாமலை பிள்ளை
திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில்79-வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மாணவர்கள், மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சுதந்திர தின உரையாற்றினார்.
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் சந்திரபிரகாஷ் ஜெயின் அவரது தந்தை நினைவாக பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை ,ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.




