திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாநில அளவிலான மாபெரும் குத்துச்சண்டைபோட்டியை டாக்டர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட அமெச்சூர் குத்துசண்டை சங்க தலைவரும், திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நண்பர்கள் குழு மாவட்ட தலைவருமான ஏ.ஏ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்ட அமெச்சசூர் குத்துசண்டை சங்க செயலாளரும் குத்துசண்டை பயிற்சியாளருமான மணிமாறன் முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை 2வது பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர் கோவிந்தன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் குத்துச்சண்டை போட்டியை மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்து பேசியதாவது:
விளையாட்டுத் துறையில் தடகள சங்கம் வாலிபால், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டுகள் மக்களிடையே மிக பிரபலமாக தெரியும். தன் குழந்தைகளையும் விளையாட்டுக்கு அனுப்பிவைப்பார்கள்.
குத்துசண்டை போட்டி அதிகளவில் எங்கும் நடக்கவில்லை எனினும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 5வது முறையாக பாக்ஸிங் மாபெரும் குத்துசண்டை போட்டி நடைபெறுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த விளையாட்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுவதில் முதலிடமாக உள்ளது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறவுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
குத்துச்சண்டை போட்டி நிறைவிழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , முதல் மூன்று இடங்களைப் பிடித்த சென்னை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.
விழாவில் சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவரும் திமுக மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன், ஓம் சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளரும் திமுக 4வது பகுதி செயலாளர் குட்டி புகழேந்தி ஆகியோர் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சீருடைகளை வழங்கினார்கள்.
தி சென்னை செப்பல்ஸ் உரிமையாளர் இம்தியாஸ் அலி கோல்டன் ஸ்பேர்ஸ் உரிமையாளர் சுந்தரபாண்டியன், அருணா ரேணு ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஏ.ஆர்.நரசிம்மன், கோல்டன் கன்ஸ்ட்ரக்சன் பிரபு ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
பயிற்சியாளர்கள் நாராயணன், ஜெயராமன், முனிராஜ், ஏ.பி.கே.சரவணன், தீனா, ஜோதி, யாக்கோப், தஸ்தகீர், பாஷா, டேனியல், அரவிந்த் ஆகியோர்கள் விழா ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். முடிவில் மாவட்ட அமெச்சசூர் குத்துசண்டை சங்க பொருளாளர் அன்பரசு நன்றி கூறினார்.




