புதுக்கோட்டையில் இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை கூட்ட அரங்கில் தொடர் மருத்துவ கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது
விழாவில் தலைவர் டாக்டர் முகமது சுல்தான் தலைமை வகித்தார் கிளைச் செயலாளர் டாக்டர் ராஜா அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தஞ்சை மண்டல மருத்துவ சேவை தலைவர் டாக்டர் சாந்தி சிறப்புரையின்போது, டாக்டர் அகர்வால் மருத்துவமனையின் மக்கள் சேவையில் கண் பரிசோதனை செய்வது நவீன அறுவை சிகிச்சை வசதிகளான Glued IOL, Pin Hole Pupilolasty, CAIRS, சிறந்து விளங்குவதை பற்றி விளக்கமளித்து புதுக்கோட்டை மற்றும் தஞ்சையில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சிறப்பாக இயங்கி வருகிறது என்றார் .
டாக்டர் ஷகில் மனிதர்களுக்கு உண்டாகும் கண் புரையினை நவீன முறையில் கண்டறிவது மற்றும் அகற்றுவது குறித்து விளக்கமளித்தார். டாக்டர் டேனிஷ் அக்தர் கண்ணில் உள்ள விழித்திரையில் (ரெட்டினாவில்) ஏற்படும் பாதிப்புகளான கண்ணீர் வடிதல் கண்ணில் ரத்த அழுத்தம் நவீன முறையில் குணப்படுத்துவதை திரையின் மூலம் விளக்கமளித்தார்
டாக்டர் சிவப்பிரியா நவீன முறையில் பார்வை குறைபாட்டினை கண்டறிவது மற்றும் நிரந்தர கண்ணாடி இல்லா அறுவை சிகிச்சை முறையினை விளக்கமளித்தார். டாக்டர் சிஷ்டிகா கண்ணில் ஏற்படும் ரத்த அழுத்தத்தை நவீன முறையில் ஆரம்ப நிலையில் கண்டறிந்து அறுவை சிகிச்சை இல்லாத நிலையில் குணப்படுத்த வசதி இருப்பதாக விளக்கமளித்தார்
விழாவில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் தையல்நாயகி மற்றும் சிறப்பாக தொடர் மருத்துவ கருத்தரங்கில் கலந்துரையாடிய மருத்துவர்களுக்கும் தலைவர் டாக்டர் முகமது சுல்தான் பாராட்டி பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினர்
இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
நிறைவாக இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டை கிளை நிதிச் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.



