தென்காசி மாவட்டம் பிரானூர் கிராமத்திற்கு உட்பட்ட வல்லம் 10வது வார்டுக்கு உட்பட்ட மெயின் ரோடு சாலையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊராட்சி சார்பில் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்திய வருகின்றனர்.
இந்த நிலையில் சாலையை தனிநபர் ஓலை மற்றும் தார்பாய்களை போட்டு ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சாமுவேல் பொன்ராஜ் என்பவர் முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியர் என பல்வேறு மனுக்களை அளித்துள்ளார்.
மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
பொதுமக்கள் சாலையை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்தது குறித்து பட்டதாரி இளைஞர் அதிகாரியிடம் கேட்டபோது அவரை அவதூறாக பேசிய பேசியதுடன் அலட்சியம் காட்டுவதாக கூறுகிறார்.
எனவே இதனை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் பொது மக்களுக்கு இடையூறாக தனி நபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை தடுத்து நிறுத்தி உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.




