தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியில் உள்ள AM டு PM என்கின்ற பிரபல உணவகமானது தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, 3-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவினை முன்னிட்டு இன்றைய தினம் தென்காசி நகராட்சி பகுதியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களை உணவகத்திற்கு அழைத்து வந்து அவர்களுக்கு தடபுடலாக பிரியாணி விருந்து அளித்து ஹோட்டல் உரிமையாளர்கள் அசத்தினர்.

குறிப்பாக, மூன்றாவது ஆண்டு தொடக்க விழாவிற்கு ஏதேனும் சலுகைகள் வழங்கினால் அதுவும் ஒருவகை வியாபாரமாகி விடும் என்பதற்காக, எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் நாள்தோறும் தமக்காக பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் நகரை சுத்தமாக வைத்துக் கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்ற விருந்து வைத்ததாகவும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்
இந்த நிகழ்வில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதீர், தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர் உமா மகேஸ்வரன், தென்காசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் எஸ்.எம்.மணி, சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன், மேற்பார்வையாளர் முத்துமாரியம்மன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், கடையில் உரிமையாளர்களான சுப்பிரமணியன் மற்றும் சுரேஷ் நாகலட்சுமி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.




