Close
மார்ச் 7, 2026 4:26 மணி

பெரியபாளையம் பவானி அம்மன் ஆடித்திருவிழாவில் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள ராட்ச ராட்டினம்

பெரியபாளையம் பவானி அம்மன் ஆடித்திருவிழா முன்னிட்டு முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள ராட்ச ராட்டினத்தினால் விபத்து நடைபெறுவதற்கு முன்பே உயர் அதிகாரிகள் கண்டு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது..

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரை அருகே சுயம்பு வாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா தொடர்ந்து 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும்

திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்துகளிலும், சொந்த வாகனங்களில் கொண்டு பெரியபாளையம் வருவார்கள்.

அவ்வாறு வரும் பக்தர்கள் அங்கு தங்கி ஞாயிற்றுக்கிழமை காலை பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் முடி காணிக்கை செலுத்தி பொங்கலிட்டு ஆடு,கோழி என பலியிட்டு வேப்பஞ்சேலை ஆடைகளை அணிந்து  பவானி அம்மனை தரிசனம் செய்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவர்.

இந்நிலையில் கோவில் அருகில் தரச் சான்று மற்றும் சான்றிதழ்களை பெறாமல் ராட்சச ராட்டினங்களை அமைத்துள்ளனர். கடந்த காலத்தில் சென்னை பல்வேறு இடங்களில் இது போன்ற ராட்சச ராட்டினங்களால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட, மற்றும் அதிகாரிகள் ராட்டினம்அமைக்கப்பட்டுள்ள இடத்தையும் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top