திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 2025ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள,. பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றைய தினம் முதல் 06.09.2025 வரை முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது . இப்போட்டிகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதாவது:
உடலினை உறுதி செய் என்று கவிஞர் பாரதியார் மற்றும் ஔவையார் ஆத்திச்சூடியில் சொன்னது போல உடலை உறுதியாக வைத்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கப்பட்ட திட்டம் தான் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளாகும் .
தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் பதிவு நடைபெற்றது தமிழ்நாட்டிலேயே அதிகமாக பதிவு கொண்ட மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் தான். ஒரு லட்சத்து 34 ஆயிரம் பதிவுகள், இதில் பள்ளி மாணவர்கள் மட்டும் 8 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள். நமது மாவட்டத்தில் மாணவ மாணவியர்கள் விளையாட்டில் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதை இந்த பதிவு சுட்டிக்காட்டுகிறது.
விளையாட்டு என்பது நமது வாழ்வில் முக்கியமான ஒன்றாகும், விளையாட்டை மாணவ மாணவியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், உடலை உறுதி செய் என்பது போல விளையாட்டை பழக்கம் படுத்திக் கொள்ளுங்கள், உடல் உறுதி, ஆரோக்கியம் மற்றும் வாழ்வியல் கோட்பாடுகளுக்கு விளையாட்டு மிக முக்கியம்.
ஒரு விளையாட்டு வீரருக்கு உள்ள ஒழுக்கம் சுயக்கட்டுப்பாடு இந்த சமூகத்தில் எந்தத் துறையிலும் இருக்கின்ற நபர்களுக்கு இருக்காது. விளையாட்டை நாம் அனைவரும் வாழ்வியல் கோட்பாடாக கொள்ள வேண்டும். மேலும் முதலமைச்சர் கோப்பைகாண விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற உள்ள அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் (பொ) நோய்லின் ஜான், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சண்முகப்பிரியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




