மதுரை மாவட்டம் வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா 31வது ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் ஜெமினி பூங்கா அருகில் கிரட் வளாகத்தில் நடந்தது.
இந்த ஊர்வலத்திற்கு பேரவை பொறுப்பாளர் எஸ் எஸ் குருசாமி தலைமை தாங்கினார். வழக்கறிஞர் அழகேசன், கண்ணன், சரவணன், மாரியப்பன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுப்பிரமணியன் வரவேற்றார்.
இந்த ஊர்வலத்தை தொழிலதிபர் சீனிவாசன் துவக்கி வைத்தார். இதில் முருகேசன், ஆறுமுகம், முருகவேல், ஆறுமுகம்,மூர்த்தி, பிச்சைமணி, உள்பட கலந்து கொண்டனர். இதில் பூஜைகளை பூசாரிகள் ஜெயராமன், வீரபத்திரன் ஆகியோர் செய்தனர்.
இந்த ஊர்வலம் தாதம்பட்டி நீரேத்தான், பொட்டுலுபட்டி, போடிநாயக்கன் பட்டி, வாடிப்பட்டி, பொன்மலை, ராமநாயக்கன்பட்டி, பேட்டைபுதூர், லாலா பஜார், தாதப்பநாயக்கன் பட்டி வழியாக சென்று வந்தது.
இதன் ஏற்பாடுகளை விநாயகர் பக்தர் பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.




