திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகளை பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் அறிவுறுத்தினாா்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாடவீதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 2-ஆவது கட்டமாக காந்தி சிலை முதல் வன்னியா் மண்டபம் வரை ரூ.14 கோடியில் கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளா் சத்யபிரகாஷ் கள ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பணிகளை செப்டம்பா் மாதம் இறுதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினாா்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் கே.முரளி, கோட்டப் பொறியாளா் ப.ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு, உதவிப் பொறியாளா் பி.சசிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தமிழக முதல்வா் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும், வந்தவாசி – காஞ்சிபுரம் 4 வழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை கண்காணிப்புப் பொறியாளா் முரளி ஆய்வு செய்தாா்.
வந்தவாசி -காஞ்சிபுரம் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்துவதற்காக முதல் கட்டமாக ரூ.72.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, வந்தவாசி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மாங்கால் சிப்காட் தொழிற்பேட்டை அருகில் இருந்து பெருநகா் வரையிலான 9 கி.மீ. தொலைவு சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது பணி முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து அவா் ஆய்வு செய்தாா். செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவி கோட்டப் பொறியாளா் ராஜேந்திரன், உதவிப் பொறியாளா்கள் கருணாகரன், லோகராஜா, பாலாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.




