Close
மார்ச் 7, 2026 2:51 மணி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வாழ்த்திய மாவட்ட கல்வி அலுவலர்

ஆசிரியராக பணிபுரிந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி  நல்லாசிரியர் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 பேர் மாநில நல்லாசிரியர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

  • வா.சுதாகர், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆண்டியாப்பாளையம். 
  • நா.சண்முகம், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, புன்னை, புதுப்பாளையம்
  • அ.நைனா. தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மலையனூர் செக்கடி
  • க.பாண்டுரங்கன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழ்வணக்கம்பாடி.
  • எம்.ரவி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சதக்குப்பம்.
  • ஜி.விஜயகுமார், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சு.நல்லூர்.
  • கி.சாந்தகுமார், தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, அடிஅண்ணாமலை
  • ரா.ரகு, பட்டதாரி ஆசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி, முத்தனூர்.
  • ந.சுமித்ரா தேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கீழ்பென்னாத்தூர்.
  • எச்.முபாரக், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, திருவோத்தூர்.
  • டி.வெங்கடேசன், பட்டதாரி ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வேட்டவலம்.
  • கே.சந்திரசேகரன், இடைநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ராஜந்தாங்கல்.
  •  ச.சரோஜினி, தலைமையாசிரியர் தூய நெஞ்சம் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, ஆவூர். 

நல்லாசிரியர் விருதுக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள், உடன் பணி புரியும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர் மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top