ஆசிரியராக பணிபுரிந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி நல்லாசிரியர் விருதுகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 பேர் மாநில நல்லாசிரியர் விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- வா.சுதாகர், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஆண்டியாப்பாளையம்.
- நா.சண்முகம், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, புன்னை, புதுப்பாளையம்
- அ.நைனா. தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மலையனூர் செக்கடி
- க.பாண்டுரங்கன், இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கீழ்வணக்கம்பாடி.
- எம்.ரவி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சதக்குப்பம்.
- ஜி.விஜயகுமார், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சு.நல்லூர்.
- கி.சாந்தகுமார், தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, அடிஅண்ணாமலை
- ரா.ரகு, பட்டதாரி ஆசிரியர் அரசு உயர்நிலைப் பள்ளி, முத்தனூர்.
- ந.சுமித்ரா தேவி, பட்டதாரி ஆசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, கீழ்பென்னாத்தூர்.
- எச்.முபாரக், பட்டதாரி ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, திருவோத்தூர்.
- டி.வெங்கடேசன், பட்டதாரி ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வேட்டவலம்.
- கே.சந்திரசேகரன், இடைநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ராஜந்தாங்கல்.
- ச.சரோஜினி, தலைமையாசிரியர் தூய நெஞ்சம் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, ஆவூர்.
நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள், உடன் பணி புரியும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர் மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர்.




