Close
மார்ச் 7, 2026 1:26 மணி

திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் தடகள விளையாட்டுப் போட்டி

பதக்கங்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் 14 முதல் 20 வயது மாணவ- மாணவிகளுக்கு நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப்போட்டியில் வெற்றி பெற்ற 180 பேருக்கு மாவட்ட ஆட்சியர்  தர்ப்பகராஜ் ,மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன், மாவட்ட எஸ்.பி. ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் 14 வயது முதல் 20 வயது வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாநகரச் செயலாளர் கார்த்திக் வேல்மாறன், திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க செயலாளர் க. புகழேந்தி, மாவட்ட விளையாட்டு அதிகாரி சண்முகப்பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த தடகள விளையாட்டுப்போட்டிகளில் 100, 200, 400, 600 1500 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், தடை தாண்டுதல் ஓட்டம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ வே.கம்பன் பேசியதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அரசின் சார்பாக மாநில அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.  முதலமைச்சர் தலைமையில் முதலமைச்சர் கோப்பை என்கின்ற விளையாட்டுப் போட்டி மாநில அளவில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதில் நமது தடகள போட்டி மட்டும் இல்லாமல் பல்வேறு போட்டிகள் தமிழ்நாட்டில் விளையாடப்பட்டு நடைபெறுகிறது.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். துணை முதலமைச்சர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறுவது,விளையாட்டுத் துறை என்பது பதக்கங்களை பெறுவது சலுகைகளை பெருகுவது மட்டுமல்ல நமது வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பதுதான் இந்த விளையாட்டுத்துறை என்று கூறுவார்.

இப்படி ஒட்டு மொத்தமாக நம்முடைய வாழ்க்கையில் இணைந்து இருக்கிறது .இதற்கு தான் தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டு இருக்கிறார்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் விளையாட்டுத்துறையில் முதன்மை இடத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த அளவில் நம்ம வீராங்கனை எல்லாம் தேசிய அளவில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்று வருவதை நாம் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பல்வேறு அரசு சலுகைகள் வழங்கப்படும். கல்லூரியில் நீங்கள் சேர வேண்டும் என்றால் விளையாட்டுத்துறைக்கு தனியாக ஒரு கோட்டாவை ஒதுக்கி அதன்மூலம் உயர் கல்வி பெறுவதற்கு இந்த அரசாங்கம் உங்களுக்கு துணையாக இருக்கும். உங்களுக்கான வேலை வாய்ப்பையும் இந்த அரசாங்கம் வழங்கிடும் என்று கூறினார் .

மாலை 6 மணி அளவில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில், வெற்றி பெற்ற 180 மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் வழங்கினர். விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட அளவிலான தடகள கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறக்கூடிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top