Close
மார்ச் 7, 2026 4:31 மணி

கலசப்பாக்கம் அருகே துணை சுகாதார நிலையம் கட்டும் பணிகள் துவக்கம்

பூமி பூஜை செய்து கட்டிடப் பணிகளை துவக்கி வைத்த சரவணன் எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி கண்ணமங்கலம் அருகே கல்பட்டு ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலா் ஆா்.வி.சேகா் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி பெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் லட்சுமி, ரபியுல்லா முன்னிலை வகித்தனா். முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் பழனி வரவேற்றாா்.

கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணியை தொடங்கிவைத்துப் பேசினாா்.

அப்போது அவர் பேசுகையில், போளூர் அடுத்த கல்பட்டு கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அப்பகுதியில் ஓரு துணை சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என்பதே பல ஆண்டுகாலகோரிக்கையாக இருந்து வந்தது. கிராமப்புறங்களில் மக்களின் சுகாதார வசதியை மேம்படுத்துவதில் திமுக அரசு அக்கறை செலுத்தி வருகிறது.

அதன்படி, கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்பட்டு ஊராட்சியில் 15-ஆவது மத்திய சுகாதார நிதியிலிருந்து ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டப்படுகிறது என்றாா்.

விழாவில் போளூர் வட்டா ர வளர்ச்சி அலுவலர்கள் லட்சுமி, ரபியுல்லா, ஒன்றிய செயலாளர் ஆர்.வி.சேகர், முன்னாள் ஒன்றிய பெருங்குழு தலைவர் சாந்தி பெருமாள், பொறியாளா் திவாகா், திமுக நிா்வாகிகள் குணசேகா், சாந்தகுமாா், ஒப்பந்ததாரா் ராமு மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

அதனைத் தொடர்ந்து கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமை பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் செல்லதுரை ,ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர், பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மனோஜ் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top