Close
மார்ச் 7, 2026 4:41 மணி

புரட்டாசி மாத பிறப்பு ஶ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பூத நாராயண பெருமாள்

புரட்டாசி மாதம் புண்ணிய பலன்களை தரக் கூடியது. பாவங்களை போக்கி, நன்மைகளை வழங்கக் கூடியது என அனைவரும் சொல்லுவதுண்டு. புரட்டாசி மாத வழிபாட்டிற்கு என தனியான கட்டுப்பாடுகளும் உண்டு.

குறிப்பாக புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலும், புதன்கிழமைகளிலும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். புரட்டாசி மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

தமிழ் மாதங்களில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து மாத பிறப்புகளும் சிறப்பு வாய்ந்த மாத பிறப்புகளாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி மாதம் அம்மன் திருக்கோயிலிலும், புரட்டாசி மாதம் பெருமாள் கோவில்களிலும், மார்கழி மாதம் அனைத்து திருக்கோயிலிலும் பக்தர்கள் அதிகாலையில் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி புரட்டாசி மாதப்பிறப்பு பிறந்ததையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வடபகுதியில், மாட வீதியில் குபேர வடிவில் வீற்றிருக்கும் 500 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஶ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினமான புதன்கிழமை அதிகாலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு பாமா ருக்மணி சமேத உற்சவர் மற்றும் மூலவருக்கு பால்,தயிர், சந்தனம், இளநீர்,பஞ்சாமிர்தம்,தேன், செஞ்சந்தனம், துளசி பொடி, மகிழம்பூ பொடி, கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ பொடி, வாசனை பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு வண்ண வண்ண மலர் மாலைகள் தொடுக்கப்பட்டு, துளசி மாலை அணிவித்து பஞ்ச கற்பூர ஆரத்தியும், நட்சத்திர ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது.

புரட்டாசி மாதப்பிறப்பு மற்றும் ஏகாதசி தினமான புதன்கிழமை அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குபேர வடிவிலான பூத நாராயண பெருமாளை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top