தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென்காசி சன்னதி பஜாரில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்தாண்டு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மேம்பட்டு புடவைகள், காஞ்சிபுரம் ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள் திருப்புவனம் பட்டு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி ரகங்கள் என ஏராளமாக துணி வகைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தாண்டு தென்காசி மாவட்டத்திற்கு ரூ. 35 லட்சம் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் கோ- ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், திருநெல்வேலி கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் ஆரோக்கியராஜ் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்..




