தென்காசி மாவட்டத்தில் தீயணைப்புத் துறையின் சார்பாக தென்காசி தலைமை மருத்துவமனையில் தீத் தடுப்பு மற்றும் விபத்து கால மீட்பு பயிற்சி தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மருத்துவமனையில் தீப்பிடித்தால் எப்படி தப்பிப்பது மற்றும் மாடியில் சிக்கியவர்கள் மீட்பது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தத்துவமாக தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர். குறிப்பாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீ பற்றி எரியும் போது தீயணைப்பு கருவியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் அவர்களை வைத்தே செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் ஒத்திகையை தத்ரூபமாக செய்து காண்பித்த தீயணைப்பு வீரர்களை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அசந்து பார்த்து பாராட்டினர்




