திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஆந்திர பக்தர் உயிரிழந்தாா்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு மாவட்ட, மா நிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பௌர்ணமி, விசேஷ நாட்களில் இலட்சக்கணக்கான பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு, கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்ணாமலையார் கோவிலில் உள்ள மூலவருக்கு தினமும் 6 கால பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த அபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தும் புரோக்கர்கள் மூலமாகவும் பக்தர்கள் அபிஷேகத்தில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்ற அபிஷேகத்தில் தெலுங்கானா மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவர் தனது தாய் மற்றும் மனைவி குழந்தைகளுடன் அபிஷேகத்தில் கலந்து கொண்டுள்ளார் .
அண்ணாமலயார் அபிஷேகம் முடித்துவிட்டு கருவறை விட்டு வைகுந்த வாயில் வழியாக உண்ணாமுலையம்மன் சன்னதிக்கு செல்லும் வழியில் சுரேஷூக்கு மூச்சுத் திணல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார். அப்போது சுரேஷ் கூட்ட நெரிசல் சிக்கி மயங்கி விழுந்தாராம்.
இதனை பார்த்த அவரது மனைவி உள்ளிட்டவர்கள் உடனடியாக தகவல் அளித்ததின் பெயரில் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், சுரேஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மாநகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அபிஷேகத்தில் கலந்து கொண்ட ஒருவர் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சோக நிகழ்வு குறித்து பக்தர்கள் கூறுகையில், அண்ணாமலையார் கோவிலில் தினமும் அபிஷேகத்திற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து அபிஷேகத்தில் பங்கு பெறலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அந்த இணையதள வழி மூலமாக விண்ணப்பித்து அபிஷேகத்தில் கலந்து கொள்பவர்களை தவிர ஏராளமானோர் அங்குள்ள புரோக்கர்களை பிடித்து உள்ளே வந்து அமர்ந்து விடுகின்றனர். இதனால் சுவாமி கருவறை முன்பு கூட்ட நெரிசல் ஈடுபட்டு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
இதற்கு கோவில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாக அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள புரோக்கர்களை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.




