Close
மார்ச் 7, 2026 2:52 மணி

மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு

தூய்மை பணியாளர்களை பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கிய மாநகர மேயர்

திருவண்ணாமலை மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூய்மை சேவையே 2025 என்ற தலைப்பின் கீழ், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஆணையா் செல்வபாலாஜி தலைமை வகித்தாா். துணை மேயா் ராஜாங்கம் முன்னிலை வகித்தாா்.

மேயா் நிா்மலா வேல்மாறன் கலந்துகொண்டு சிறப்பாக பணியாற்றிய 25 தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

இதில் மூத்தோா் தடகள சங்க மாநில துணைத் தலைவா் ப.காா்த்திவேல்மாறன், மாமன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா்கள், தூய்மை பாரத பரப்புரையாளா்கள், தற்காலிக தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட நல்லவன்பாளையத்தில் ஒரு தனியார் திருமண மகாலில் பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

இந்த முகாமிற்கு மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி தலைமை தாங்கினார். மூத்தோர் தடகள சங்க மாநில துணை தலைவர் கார்த்திவேல்மாறன், துணை மேயா் ராஜாங்கம் ,பகுதி பொறுப்பாளர் ஷெரிப், வட்டாட்சியர் மோகனராமன் ஆகியோர் முன்னிலை வகிக்க, உதவி நகர திட்டமிடுபவர் எஸ். சீனுவாசன் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் கலந்து கொண்டு துணைஆட்சியர் (கலால்) செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

அரசு துறைகள் திட்ட ங்களின் பயன்கள் மக்களுக்கு எளிதில் கிடைப்பதை உறுதிசெய்வதற்காக அனைத்து பகுதிகளிலும் உங்களுடன் ஸ்டாலின் எனும் சிறப்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 387 முகாம்கள் நடத்த திட்டமிட்டு முதற்கட்டமாக நகர பகுதிகளில் 33 முகாம்களும் கிராம பகுதிகளில் 81 முகாம்களும் நடந்து வருகிறது.

இந்த முகாம்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். மாநகராட்சி, மற்றும் வருவாய்த்துறை மற்றும் சமூகநலத்துறை உள்ளிட்ட 13 துறைகள் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி அரங்குகள் அமைத்து பொதுமக்களின் கோரிக்கைகளின் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த முகாமில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சரவணன், நகர அமைப்பு ஆய்வாளர் விஜியகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top