நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழாvil ஆண்டாள் அலங்காரத்தில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை வழிபட்டனர்.
அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழாதொடங்கி தொடர்ந்து 9 நாட்கள் பராசக்தி அம்மன் திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாரதா நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. உண்ணாமலை அம்மன் சன்னதியில் ஆண்டாள் அலங்காரத்தில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் சோடச உபசாரம் எனும் 16 வகை தீபாராதனை நடத்தினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர்.
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில்
திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் நவராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த விழாவானது, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த விழாவின்போது சுவாமிகளின் அருள் வேண்டிய பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள், பூஜைகள் மற்றும் அன்னதானம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இவ் வருடத்திற்கான நவராத்திரி விழா 22 ஆம் தேதி முதல் துவங்கி அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நவராத்திரி விழா 6- ம் நாள் அம்மன் ஆண்டாள் அலங்காரத்தில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினார். ஆண்டாள் அலங்காரத்தில் ஆண்டாளின் கையில் கண்ணாடியில் ஆண்டாள் தன் அழகே ரசிப்பது போன்ற அலங்காரத்தை பக்தர்கள் பார்த்து பரவசமடைந்தனர். சிறப்பு அலங்காரங்களை முத்து குருக்கள் செய்திருந்தார்.
அஸ்வினி மற்றும் நந்தினி அவர்களின் இன்னிசை கச்சேரியுடன் மகா ஆரத்தி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வானஅக்டோபர் மாதம் 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு மகா சண்டி ஹோமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமத்தில் நவராத்திரி விழா ,சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள்





