திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரியில் 3. அடி ஆழமும் குறிப்பிட்ட அளவிற்கு சவுடு மண் அல்ல தனி நபருக்கு மாவட்ட நிர்வாகம், கனிமவளத் துறை அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் அளவிற்கு மீறி பள்ளம் தோன்றி, சவுடு மண் மற்றும் விதிகளை மீறி இரவு நேரத்தில் மணல் அள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 8.மணி அளவில் லாரி ஒன்று மணல் நிரப்பி மேலே சவுடு மண் ஏற்றி செல்வதாக கிராம மக்களுக்கு வந்த தகவலை அடுத்து கிராம மக்கள் ஒன்று கூடி ஏரி பகுதிக்குச் சென்று ஏரிக்குள் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து பெரியபாளையம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் சவுடு மண் கோரைகளை பயன்படுத்தி இரவு நேரங்களில் மணல் எடுப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதோடு இந்த ஏரியை சுற்றி ஏரிக்குள் இருக்கும் நீரை நம்பி பல நூறு ஏக்கர் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இதுபோன்று சௌடுமண் எடுப்பது என்று கூறி மணல் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்படும். இதுபோல சம்பவங்கள் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது




